மரவள்ளி கிழங்கு விலை ஏறியது – விவசாயிகள் மகிழ்ச்சி
மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வரை உயர்ந்து, 7,000 ரூபாய்க்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்;
மரவள்ளி கிழங்கு விலை ஏறியது – விவசாயிகள் மகிழ்ச்சி
பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் எனப்படும் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி மற்றும் பெருங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பரந்தளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கிழங்குகளை, வியாபாரிகள் களத்தில் இருந்து வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை மற்றும் ஆத்தூர் பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த ஆலைகளில் மரவள்ளி கிழங்குகளை அடிப்படையாகக் கொண்டு ஜவ்வரிசி, கிழங்கு மாவு, சிப்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. கிழங்குகளில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த வாரத்தில் மரவள்ளி கிழங்கு ஒரு டன் ரூ.5,000-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.500 உயர்ந்து ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிப்ஸ் தயாரிக்கப் பயன்படும் கிழங்குகளின் விலை, கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.6,000 இருந்த நிலையில், தற்போது ரூ.1,000 உயர்ந்து ரூ.7,000-க்கு அதிகரித்துள்ளது.