பாஸ்ட் புட் கடையில் சாப்பிட வந்தவரை அடித்து கொன்ற 6 பேர் கைது

நாமக்கல் பாஸ்ட் புட் கடையில், மது குடித்ததால் கடை உரிமையாளர் உள்பட 6 பேர் பீர் பாட்டிலும், கரண்டியாலும் அவரை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2025-05-14 03:50 GMT

பாஸ்ட் புட் கடையில் சாப்பிட வந்தவரை அடித்து கொன்ற 6 பேர் கைது

நாமக்கல் நகரில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடையில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், மதுபோதையில் இருந்த ஒருவர் அந்த கடைக்கு சென்று சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார். பின்னர், கடையில் தண்ணீர் குடிக்க வைக்கப்பட்ட டம்ளரில், தன் அருகில் வைத்திருந்த மதுவை கலந்து குடிக்கத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்த கடை ஊழியர்கள் ஜோதிமலர் மற்றும் நிஷாஸ்ரீ இருவரும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, நாமக்கல் தமிழர் தேசம் கட்சி நகரத் தலைவர் மவுலீஸ்வரன் (25) என்பவருக்கு நிஷாஸ்ரீ அலைபேசியில் தகவல் அளித்தார். உடனடியாக அவர் தனது நண்பர் பிலிக்ஸ் (25) உடன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். இருவரும் கூச்சலடித்து, மதுபோதைய நபர் ஸ்ரீதரை பீர் பாட்டிலும், சிக்கன் ரைஸுக்காக பயன்படுத்தப்படும் கரண்டியாலும் தாக்கினர். இந்த தாக்குதலில் ஸ்ரீதர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனே அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்தவர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

சம்பவம் குறித்து விசாரித்த நாமக்கல் போலீசார், ஜோதிமலர், நிஷாஸ்ரீ, மவுலீஸ்வரன், பிலிக்ஸ் மற்றும் இவர்களுக்கு தப்பிக்க உதவிய கோபிநாத் (30) மற்றும் அரவிந்த் (22) ஆகிய ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News