நாமக்கலில் மே 16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும் மே 16ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது;
நாமக்கலில் மே 16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், வரும் மே 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம், மாவட்டத்தில் மாதந்தோறும் நடைபெறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று வழக்கம்போல் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை நேரடி சந்திப்பு மூலம் தேர்வு செய்ய உள்ளன.
இந்த முகாமில் மேலாளர், கணினி இயக்குபவர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், தட்டச்சர், காசாளர், மெக்கானிக் மற்றும் சேல்ஸ் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணிகளுக்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 முடித்தவர்கள், பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. முடித்தவர்கள், கணினி பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து கல்வித் தகுதியும் உள்ள ஆண் மற்றும் பெண்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு நேரடியாக பணிநாடுனர்களை சந்தித்து பயனடையலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து விரிவான தகவலுக்கு, நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தை 04286-222260 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் உமா, இம்முகாமில் திறமை உள்ளோர் பங்கேற்று தங்களது வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.