தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய மாட்டோம்: வைத்திலிங்கம் விளக்கம்..!

Election Commission News Today - அ.தி.மு.க.,வின் ஒரே தலைமை விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் இல்லை என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-22 05:58 GMT

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்.

Election Commission News Today - அ.தி.மு.கவில் ஒரே தலைமை பதவி கோஷம் வலுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இடைப்பாடி பழனிசாமி ஆகியோர் இரு பிரிவாக ஆதரவாளர் கூட்டத்தை கூட்டி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று இடைப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்துள்ளது.

இந்த சூழலில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News