திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைப்போம் -முதல்வர் ஸ்டாலின் உறுதி

திருநங்கைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற திருநங்கைகள்.

Update: 2022-04-15 11:34 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.4.2022) முகாம் அலுவலகத்தில், திருநங்கைகள் தினத்தையொட்டி, திருநங்கைகள் நல வாரிய உறுப்பினார் முனைவர் ரியா, தோழி அமைப்பின் நிர்வாகி சுதா, கேட்ரினா, இயன் முறை மருத்துவர்கள் செல்வி சந்தோசம் மற்றும் மோனிகா ஆகியோர் நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்று பேசினார்கள். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உடனிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.கஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு திருநங்கையர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருநங்கையர் கண்ணியம் காத்த முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் நமது அரசு, திருநங்கையர் - திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும்! என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News