தென்மாவட்டங்களில் கனமழை: ரயில்கள் ரத்து

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் 23 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Update: 2023-12-19 04:37 GMT

தென்னக ரயில்வே வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 4 மாவட்டங்களும் வெள்ளநீரால் சூழப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

 தூத்துக்குடி வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற ரயிலால் பயணிகள் சிக்கி தவித்து வருகின்றனர். ரயிலில் இருந்து 800 பயணிகளில் 300 பேர் அங்குள்ள கிராம பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  

திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சென்னை - குருவாயூர் விரைவு ரயில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து குருவாயூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல, குருவாயூரிலிருந்து எழும்பூர் வரை செல்லக் கூடிய விரைவு ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் 23 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இரு மாவட்டங்களிலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சில ரயில்கள் திண்டுக்கல்லில் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லையிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டிருந்தன.

செவ்வாய்க்கிழமை (டிச.19) வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில்கள் (இருமார்க்கத்திலும்), கோவை-நாகா்கோவில் (16322) ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை, நாகா்கோவில், திருச்செந்தூா், தூத்துக்குடி, செல்லும் அனைத்து முன்பதிவில்லா ரயில்களும், திருச்செந்தூரிலிருந்து - வாஞ்சி மணியாச்சி முன்பதிவில்லா ரயிலும் டிச.19-இல் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி - திருவனந்தபுரம் (இருமார்க்கம்), பாலக்காடு - திருநெல்வேலி (எண். 16792), திருச்செந்தூா் - எழும்பூா் (20606) ஆகிய விரைவு ரயில்கள் டிச.19-இல் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News