குரூப் 2 தேர்வு: முகக்கவசம் கட்டாயம், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து வர தடை

குரூப் 2 தேர்வின் போது தேர்வு எழுதுவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றுஅரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

Update: 2022-05-11 13:41 GMT

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையம் இன்று வெளியிட்டு இருந்தது. 

இது தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையம்  வெளியிட்டு உள்ள அறிக்கையில், 

தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News