மார்ச் 28, 29ல் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை: அரசு

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

Update: 2022-03-25 12:15 GMT

வரும் மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டனர்.

இதேபோல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும்; அவ்வாறு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று, அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அத்துடன், அந்த இரு தினங்களில் பணிக்கு வராதவர்களின் விவரங்களை அனுப்பி வைக்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News