மெரினா - கோவளம் கடற்கரை சீரமைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான கடற்கரையை மறுசீரமைக்க தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது;

Update: 2022-07-27 14:33 GMT

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்ட பேரவையில் ஏப்ரல் மாதம் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் மற்றும் சுற்றுசூழல் சார்நிலை மாற்றம் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து மெரினா முதல் கோவளம் வரையிலான 30 கி.மீ. நீள கடற்கரை பகுதியில் ரூ.100 கோடியில் மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்க பணிகள் மேற்கொள்வதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், சென்னை எண்ணூர் முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதியை பருவகால மாற்றத்தின் அடிப்படையில் பாதுகாப்பதற்கும் மேலும் இந்த கடற்கரை பொறுத்தவரையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் இடமாக அமைந்துள்ளது.

மேலும் 20 கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் வந்துசெல்வதால் கடலரிப்பு மற்றும் மண் குவியல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதால் இதனை மேம்படுத்துவதற்கு திட்டம் வகுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதனை பரிசீலனை செய்து தமிழக அரசு ரூ.100 மதிப்பீட்டில் மறுசீரமைப்பு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News