வந்தவாசி ஒன்றிய குழு கூட்டம்

Today Meeting - தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை.

Update: 2022-06-25 01:41 GMT

வந்தவாசியில் நடைபெற்ற  ஒன்றிய குழு கூட்டம்.

Today Meeting - வந்தவாசி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவாசி ஒன்றிய குழு தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தார்.  வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, மூர்த்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து பேசினர். இதற்கு உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன் பதிலளித்து பேசினார் பின்னர் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பான தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News