சொத்துவரி: பொதுமக்கள் ஒத்துழைக்க நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சொத்துவரி பொது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வந்தவாசி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

Update: 2022-05-08 06:21 GMT

வந்தவாசி நகரில் நடைபெற்று வரும் சொத்துவரி போது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையர் முஸ்தாபா அறிவுறுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: 

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட இருபத்திநான்கு வார்டுகளிலும் சொத்துவரி போது சீராய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் , உதவிப் பணியாளர்கள் வீடுகள் கடைகளை அளவீடு செய்ய வருவார்கள். அப்போது வீடுகள் கடைகளின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள், நகராட்சி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்   என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News