வந்தவாசி பகுதியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி

வந்தவாசி பகுதியில் பலத்த மழை பெய்தது. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2022-04-14 01:11 GMT

வந்தவாசி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள மும்முனி, அம்மையப்பட்டு, வெண்குன்றம், சென்னாவரம், மருதாடு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்தது. பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்தநிலையில் வந்தவாசி பகுதியில் நேற்று மதியம் மேக மூட்டமாக இருந்தது. பின்னர் நேற்று இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News