போனஸ் அறிவிப்பை எதிர்த்து சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு தன்னிச்சையாக 10 சதவீதம் போனஸ் அறிவித்ததை கண்டித்து சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-25 07:51 GMT

அரசு தன்னிச்சையாக போனஸ் அறிவித்ததை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தன்னிச்சையாக 10 சதவீதம் போனஸ் அறிவித்ததை கண்டித்து சிஐடியு சார்பில் வந்தவாசி பணிமனை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பணிமனை தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஊழியர்கள் நல அமைப்பின் நிர்வாகி உதயகுமார் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை செய்த பிறகே தமிழக அரசு போனஸ் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News