வந்தவாசி மின்கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம்

வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரியம் அறிவிப்பு

Update: 2021-07-30 07:58 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மின் கோட்டத்திற்குட்பட்ட வந்தவாசி,  தெள்ளாறு, கீழ்கொடுங்கலூர், புரிசை, சத்தியவாடி, மாம்பட்டு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.  இதையொட்டி மின்  கோட்டத்திற்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Tags:    

Similar News