திருவண்ணாமலை, வந்தவாசியில் நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு காரணமாக திருவண்ணாமலை, வந்தவாசி துணை மின்நிலையங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-18 01:32 GMT

பைல் படம்.

திருவண்ணாமலையில் மின் பராமரிப்பின் காரணமாக திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசம்பாடி , நொச்சி மலை, மலப்பாம் பாடி அரசம்பட்டு, வள்ளி வாகை, சடையனோடை சேர்ந்த ஆகிய பகுதியில் நாளை 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதேபோல் வந்தவாசியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வந்தவாசி, புரிசை, தெள்ளாறு, சத்தியவாடி ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News