அரசம்பட்டு அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் சத்துணவு சாப்பிட்டு ஆய்வு

அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் சத்துணவு சாப்பிட்டு ஆய்வு செய்தாா்.;

Update: 2022-04-01 08:10 GMT

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம்  மாணவ-மாணவிகளுக்கு வழங்கிய சத்துணவை சாப்பிட்டு பார்த்து  ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது மாணவ-மாணவிகளுக்கு வழங்கிய சத்துணவை சாப்பிட்டு பார்த்தார். தினமும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது, தினமும் முட்டை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி வடிவேல், தலைமை ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர்கள் அரங்கநாதன், அய்யாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News