கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த அதிகாரி

வந்தவாசி அருகே கீழ்வெள்ளியூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புறக்கணித்து வெளியேறினார்

Update: 2022-04-25 03:30 GMT

 கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் நடைபெற்ற சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி,  சிறப்புரையாற்றினார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் கீழ்வெள்ளியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் திலகம் குப்புசாமி தலைமையில் நடந்தது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கிராம சபை கூட்டத்தில் 8 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

கிராம பொதுமக்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் பல கேள்விகளை கேட்டனர். அதைப் பொருட்படுத்தாமல், தீர்மானங்கள் எழுதாமல், இடைவெளி விட்டு நோட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு, கிராம சபைக்கூட்டத்தை தொடர்ந்து நடத்தாமல் புறக்கணித்து விட்டு, அரை மணிநேரத்தில் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதிகாரி சென்றதும் கிராம சபை கூட்டமும் முடிந்தது. அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காஞ்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு முறையான அழைப்பு விடுக்காததால் அவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். 

கீழ்பென்னாத்தூர் தொகுதி சு.பொலக்குணம் ஊராட்சியில்  நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில்  தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து சிறப்புரையாற்றினார்

Tags:    

Similar News