பள்ளியை தரம் உயர்த்தக் கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தெள்ளாறு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.;

Update: 2022-08-30 08:16 GMT

தெள்ளாறு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்  கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தெள்ளாரில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

தெள்ளார் காவல் நிலையம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முருகன், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சுகுமார், ஒன்றிய தலைவர் அஜித், ஒன்றிய செயலாளர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கையெழுத்து பெற்றனர். இந்த கையெழுத்துக்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும் என கூறினர்

Tags:    

Similar News