திருவண்ணாமலை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.

Update: 2022-07-10 07:17 GMT

வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் 5-வது வார்டுக்கு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் 2 பேர் போட்டியிட்டனர்.

தேர்தல் அலுவலர் கே.பாஸ்கரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பாதுகாப்பு அறையில் ஓட்டு பெட்டியை வைத்து சீல் வைத்தனர்.

அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.அதேபோல் கண்ணமங்கலம் அடுத்த வாழியூர் ஊராட்சி மூன்றாம் வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது.நேற்று மாலை 5 மணி வரை 162 பேர் வாக்களித்தனர்.

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு பரணிதரன் ஆகியோர் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டனர்.கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன், சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News