வந்தவாசி அருகே நண்பர் போல் பழகி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-07-02 10:45 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் இவருடைய பாட்டி வீடு , வந்தவாசி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது. மாணவி அடிக்கடி பாட்டி வீட்டுக்கு சென்று வருவது வழக்கம், அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மாணவியின் உறவினரான தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் வாலிபர் சிறுமியிடம் கடந்த ஒரு ஆண்டாக நண்பர் போல் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மே மாத விடுமுறை நாளில் தனது பாட்டி வீட்டிற்கு அந்த மாணவி சென்றுள்ளாராம். அப்போது பாட்டிக்கு சொந்தமான மாடு ஒன்றை ஓட்டிக்கொண்டு அங்கு இருந்த ஏரி பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் மாணவியை திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் மாணவியின் உடலில் மாற்றங்கள் தெரிந்ததால் அவரது தாய் செய்யாற்றில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அதில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை யடுத்து மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார், ஆனால் மாணவியின் தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதுகுறித்து துணை சுகாதார நிலைய செவிலியருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் உடனடியாக மாணவியை அழைத்து சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனை நிர்வாகம் மாணவி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்,

அதனை தொடர்ந்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் துணை ஆய்வாளர் சாந்தி இது குறித்து விசாரணை நடத்தினார். அதில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News