இரு பைக்குகள் மோதல்; இறைச்சி கடை தொழிலாளி பரிதாப உயிரிழப்பு

ஆரணி சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் இறைச்சி கடை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-08-16 06:58 GMT

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் அருந்ததியர் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 35). கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சரவணன், தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வரும் கமலக்கண்ணன் (வயது 45) என்பவருடன் ஆரணி சாலையில் உள்ள கடைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அங்குள்ள பயணியர் விடுதி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த கமலக்கண்ணனை பொதுமக்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News