வந்தவாசி அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபர் போக்சோவில் கைது

POCSO Act in Tamil -வந்தவாசி அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

Update: 2022-09-29 00:52 GMT

POCSO Act in Tamil -திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பிருதூரை சேர்ந்தவர் ஷேக். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அந்த பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பெண் குளிப்பதை வாலிபர் எட்டி பார்த்துள்ளார். இதனைக் கண்டு அச்சமடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் அங்கிருந்து வாலிபர் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதுகுறித்து பெண்ணின் தாயார் வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை பிடித்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News