அரசு சுகாதார அலுவலகத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை அரசு சுகாதார அலுவலகத்தில் கணக்கு உதவியாளர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-25 01:46 GMT

பைல் படம்

திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்:

கணக்கு உதவியாளர் - 1

கல்வி தகுதி: Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும்.மாதச் சம்பளம்: ரூ.16,000 /-

பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் (Physiotherapist)கல்வி தகுதி: பிசியோதெரபி படிப்பில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மாதச் சம்பளம்: ரூ.13,000 /-

நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர்கல்விதகுதி: செவிலியர் படிப்பில் பிஎஸ்சி/எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மாதச் சம்பளம்: ரூ.25,000

நிபந்தனைகள்:

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.12.2022

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 02.12.2022

குறிப்பு:

மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் 05.12.2022 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News