இளைஞர் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் 3வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-10-06 01:59 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட  உறவினர்கள்

கலசப்பாக்கம் அருகே மா்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் 3-ஆவது நாளாக சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தேவனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் இளங்கோ. இவா், கடந்த அக்.1-ஆம்தேதி தேவனாம்பட்டு-திருவண்ணாமலை சாலையில் உடலில் தீப்பற்றிய நிலையில் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவா் அக்.2-ஆம்தேதி உயிரிழந்தாா்.

பின்னா், அவரது சடலம் உடற்கூறாய்வு செய்யப்படடது. அப்போது, அவரது உறவினா்கள் இளங்கோவின் இறப்பில் மா்மம் இருப்பதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் சடலத்தை வாங்க மறுத்தும் தேவனாம்பட்டு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா்.

இந்த நிலையில், சனிக்கிழமை நாயுடுமங்கலம் கூட்டுச் சாலையில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் இளங்கோவின் உறவினா்கள் 3ஆவது நாளாக மீண்டும் மறியலில் ஈடுபட்டனா்.

நான்கு நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை, போலீசார் இந்த விவகாரத்தில் சரியான பதில்களை கூற மறுக்கின்றனர் என விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் வளர்மதி, விழுப்புரம் திருவண்ணாமலை மண்டல செயலாளர் செல்வம், முன்னாள் மாவட்ட செயலாளர் பகலவன் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் இறந்த இளங்கோவின் உறவினர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவல்துறை சார்பில் ஏடிஎஸ்பி பழனி, போளூா் டிஎஸ்பி மனோகரன் , வருவாய் அலுவலர்கள் , தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என்றும் இளங்கோவன் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்தனர்.

இளங்கோவன் மரணத்திற்கு யார் காரணமோ அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், அதுவரை இளங்கோவனின் உடலை நாங்கள் பெற்றுக் கொள்ள மாட்டோம், குற்றவாளிகளை கைது செய்த பிறகு உடலை பெற்றுக் கொள்கிறோம் அதுவரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அப்போது, வரும் அக்டோபா் 10-ஆம்தேதிக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக கூறினாா். இதையடுத்து, உறவினா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மேலும், தேவனாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 6 பேரை சந்தேகத்தின்பேரில், போலீஸாா் விசாா்த்து வருகின்றனா். இந்தச் சம்பவம் தொடா்பாக கிராமத்தில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Tags:    

Similar News