விவசாயியை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் கள்ளக்காதலன் கைது

சந்தவாசல் அருகே விவசாயியை துப்பாக்கியால் சுட்ட மனைவியின் கள்ளக்காதல் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-30 13:23 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 24). இவர் மேல் செண்பகத்தோப்பு பகுதியை சேர்ந்த நதியா என்பவரை திருமணம் செய்து கொண்டு, 11 மாத குழந்தையுடன் அங்கேயே வசித்து வருகிறார்.

கடந்த 21-ந்தேதி சாமிநாதன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் சாமிநாதனின் தலையில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று நதியாவின் கள்ளக்காதலனான வேலூர் மாவட்டம் அணைக்கட்டை அடுத்த தண்டையான் கொட்டாய் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை, சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News