மழைநீர் தேங்கிய பகுதியில் நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை அருகே சொரகுளத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்கிய பகுதியில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-11 06:19 GMT

நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட சொரகொளத்தூர் கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே உள்ள சொரகுளத்தூர் கிராமத்தில் பாட்டை தெருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனினும் வேறு வழியின்றி இந்த பாதையில்நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் மழைநீர் தேங்கி  இருப்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த தெருவில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News