திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேர் கைது

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2022-01-15 14:03 GMT

காட்டுபன்றி வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட இருவருடன் வனத்துறையினர்.

திருவண்ணாமலை மாவட்ட வனபாதுகாப்பாளர் சுஜாதா அறிவுரையின் பேரில், மாவட்ட வன அலுவலர் அருண் லால் உத்தரவுபடி வனச்சரகம் சீனிவாசன் தலைமையில் வனக்குழுவினர் இன்று காலை வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது கண்ணமடை காப்புகாடு, நாச்சியந்தல் பகுதியில் மர்ம நபர்கள் 2 பேர் காட்டுபன்றி இறைச்சியை சுட்டு பொட்டலமாக விற்பனை செய்வது தெரியவந்தது.

அவர்களை வனக்குழுவினர் மடக்கி பிடித்தனர். இதில் அவர்கள் பொலக்குடியை சேர்ந்த விஜயகாந்த் என்ற சிங்கம் (வயது34) நாச்சியந்தலை சேர்ந்த கார்த்திகேயன் (42) என்று தெரியவந்தது.

அவர்களை வனக்குழுவினர் கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 7கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட பொலக்குடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News