கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டம்

கலசப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-22 06:26 GMT

மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50 மாற்று திறனாளிகள் தங்களுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்க வேண்டும் எனவும், அரசு சார்பில் வழங்கப்படும் பசுமை வீடு வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கலசப்பாக்கம் போலீசார் மற்றும் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அன்பரசி ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரித்திங்கராஜ் ஆகியோர் நேரில் சென்று மாற்றுத் தினாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை மனுவாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். மேலும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட மாற்று திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News