திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2021-07-09 06:59 GMT

மாதிரி படம்

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆரணியில் 115.5 மி மீ மழை பெய்துள்ளது. கண்ணமங்கலம் பகுதியில் வராக நதியில் வெள்ளம் பாய்ந்தோடியது. போளூர்,கலசப்பாக்கம்,  பகுதிகளில் பெய்த கன மழையினால் வெண்மணி, செங்குணம், வடமாதிமங்கலம், போன்ற கிராமங்களில் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News