கலைஞர் கனவு இல்லம் திட்டம்; பயனாளிகளுக்கு அரசு ஆணை வழங்கிய எம்எல்ஏ!

ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணை எம்எல்ஏ வழங்கினார்.

Update: 2024-10-23 04:05 GMT

பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் அரசு ஆணையை  வழங்கிய சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 127 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையை சரவணன் எம்எல்ஏ வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றி ய அலுவல க த் தி ல் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளுக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 127 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரி செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கேசவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டமைப்பு தலைவர் ஸ்ரீதர், அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ , பேசுகையில்,

தமிழக அரசு தமிழக மக்களுக்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கீழ் குடிசை இல்லா கிராமங்களாக மாற்றுவதற்காக இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்து அதன் மூலம் அரசாணை வழங்கி மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதால் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு பணியின் தொகையை வழங்க மாட்டோம் என்று யாராவது கூறினால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அதை கண்டு நீங்க யாரும் அச்சப்படாமல் லஞ்சம் யாராவது கேட்டால் உடனடியாக என்னிடமும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் தகவல் கூறுங்கள் அப்படி கூறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உங்களுக்காக பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறார். இந்த ஆண்டு கோடை விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஐந்தாயிரம் பயனாளிகளுக்கு ஜாதி சான்று பட்டா மாறுதல் சான்று போன்ற சான்றிதழ்கள் வழங்கினார். ஜவ்வாது மலை மக்கள் பயன்பெறும் வகையில் சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டி துணை முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில் சாலை அமைக்கும் பணியை தீவிர படுத்தினார். அதை மாவட்ட ஆட்சியரும் நானும் நேற்று முன்தினம் ஆய்வு செய்து சாலையை அமைப்பதற்கு துரிதப்படுத்தினோம் . மேலும் இந்த வீடு கட்டும் பணியை மூன்று மாதத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் குடிசை இல்லா கிராமமாக மாற்ற வேண்டும், மேலும் இந்த வீடு கட்டும் பொழுது உங்களுக்கு தேவையான சிமெண்ட், கம்பி போன்ற தரமான பொருட்களை உங்களுக்காக தமிழக அரசு வழங்குகிறது என்று கூறி 127 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் அரசு ஆணையை சரவணன் எம்எல்ஏ வழங்கி நிகழ்ச்சியில் பேசினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவராணி கோவிந்தராஜ், சாந்தி ஜெயராமன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக நிர்வாகிகள், கலந்து கொண்டனர். 

Similar News