திருவண்ணாமலையில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

திருவண்ணாமலையில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவரும் உயிரை மாய்த்துக் கொண்டார்.

Update: 2022-02-11 07:34 GMT

திருவண்ணாமலை நாயுடுமங்கலம் மேப்பதுறை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30), போர்வெல் லாரி ஆபரேட்டர். இவரும், திருவண்ணாமலை புதுதெருவை சேர்ந்த ஞானஜோதி (20) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இவர்களுக்கு 4 வயதில் விநாயகம் என்ற மகனும், 1½ வயதில் இளமதி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் புதுத்தெருவில் வசித்து வந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 8-ந்தேதி இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மனவேதனை அடைந்த ஞானஜோதி,  வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து பிரசாந்த் மேப்பதுறைக்கு தப்பி சென்றார். தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஞானஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைக்காக போலீசார் தேடியுள்ளனர். இதையறிந்து பயந்து போன பிரசாந்த் மேப்பதுறையில் உள்ள அவரது நிலத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் அவரது உறவினர்கள் பிரசாந்தின் உடலை எரித்துவிட்டனர். இது குறித்து கலசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News