கலசப்பாக்கம் பகுதியில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவக்கம்

Update: 2021-09-04 13:52 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலசபாக்கம் தொகுதியில் சமத்துவபுரம் கொண்டுவர வேண்டுமென தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர், ஆகியோரிடம் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வலியுறுத்தி வந்தார்.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று இடங்களில் சமத்துவபுரம் தொடங்க இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் கரிமங்கலம் கிராமத்தில் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் இன்று ஈடுபட்டார். இப்பணியின் போது மாவட்ட கவுன்சிலர்கள், விஏஓ, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News