மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிய அண்ணாதுரை எம்.பி.

கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அண்ணாதுரை எம். பி.மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

Update: 2022-09-01 07:56 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை  அண்ணாதுரை எம்பி, சரவணன் எம்.எல்.ஏ.ஆகியோர் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை  மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

காஞ்சி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கை ,  காதொலிக் கருவி,. மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி   என 520 பேருக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த திருவண்ணாமலை கலசப்பாக்கம் செங்கம், திருப்பத்தூர் உள்ளிட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 2200 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் மூன்று கோடி செலவில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகிறது.மூத்த குடிமக்களுக்கு விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்திய நலத்திட்ட உதவிகளை வழங்குவோம் என கூறினார்.

நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் ,ஒன்றிய குழு தலைவர்கள், செங்கம் வட்டாட்சியர் முனுசாமி, ஒன்றிய செயலாளர், காஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி, துணைத்தலைவர் ஜெயக்குமார்   மற்றும் மாற்றுத்திறனாளிகள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள்,  அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News