கண்ணமங்கலம் பேரூராட்சியில் மந்தமான வாக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது

Update: 2022-02-19 08:45 GMT

வாக்காளர்கள் இல்லாமல் வெறிச்சோடிய வாக்கு சாவடி

கண்ணமங்கலம் பேருராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.

இதற்காக கண்ணமங்கலம் அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையத்தில் ஒரு வாக்குச்சாவடியும், கண்ணமங்கலம் இந்து ஆரம்பப்பள்ளி வளாகத்தில் 9 வாக்குச்சாவடிகளும், முஸ்லிம் துவக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகளும், புதுப்பேட்டை ஆரம்பப் பள்ளி வளாகத்தில் 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

கண்ணமங்கலத்தில் 6,928 வாக்காளர்கள் உள்ளனர். பெண் 3,645, ஆண் 3,282, திருங்கை ஒருவர் உள்ளனர்.

9வது வார்டில் இருளர் இனத்தை சேர்ந்த 27 பேர் வரிசையில் சென்று வாக்களித்தனர்.

கண்ணமங்கலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் வாக்குகப்பதிவு விருவிருப்பில்லாமல் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News