ஊரடங்கு தளர்வு எதிரொலி: இயல்பு நிலைக்கு வந்தது திருப்பூர் நகரம்

ஊரடங்கு தளர்வின் காரணமாக திருப்பூர் மாநகரில், வாகனப்போக்குவரத்து தொடங்கி, பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

Update: 2021-07-05 05:54 GMT

கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் கொரோனா தொற்று குறைவுக்கு ஏற்பதமிழக அரசு தளர்வு அறிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தளர்வுகள் வழங்கப்பட்டது. அதன்படி திருப்பூரில் பஸ்கள் ஓட துவங்கின.தொழில்நகரமான திருப்பூரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக் கும் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும் 100 சதவீத தொழிலாளர்கள் சென்றனர். இதனால் திருப்பூர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

போக்குவரத்து நெரிசல்

இதனை உறுதிப்படுத்தும் விதமாக காலை முதல் மாநகரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. குறிப்பாக திருப்பூர் குமரன் சாலை, அவினாசி சாலை, பல்லடம் சாலை என பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 10 மணிக்கு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் ஒரே நேரத்தில் வந்ததால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோல் பல சாலைகளில் பின்னலாடைகள் வாகனங்களில் அங்கும், இங்குமாக ஏற்றிக்கொண்டும் செல்லப்பட்டன. கடந்த சில மாதமாக அமைதியாக இருந்தது திருப்பூர். இந்நிலையில் அரசின் தளர்வுகளின் காரணமாக மீண்டும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News