திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி ஜவுளிகள் தேக்கம்

கொரோனா பொது முடக்கம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.

Update: 2021-05-12 11:52 GMT

கொரோனா லாக்டவுன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.200 கோடி மதிப்பிலான விசைத்தறி ஜவுளிகள் தேங்கியுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டங்களில் 1.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி கூடங்களில் மட்டும் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி தொழில் சார்ந்த பஞ்சாலைகள், நூற்பாலைகள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்களில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2 வது அலை வேகமாகப் பரவி வருவதால் அனைத்து வர்த்தகமும், தொழில் நிறுவனங்களும் மீண்டும் முடங்கியுள்ளன. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ 200 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேங்கியுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

விசைத்தறியாளர்கள் கூறுகையில், .திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிரே காடா காட்டன் துணி, இந்தியாவில் மகாராஷ்டிரா, பாலி, பலோத்ரா, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தூத்துக்குடி துறைமுகம் வழியே வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மொத்த வியாபாரிகள் துணி வாங்குவதை குறைத்து விட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி மீட்டர் கிரே காடா துணி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் விசைத்தறியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News