திருப்பூர் மாநகராட்சி நோய்கட்டுப்பாட்டு பகுதியில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு

Inspection by Special Surveillance Officers in Tirupur Corporation Disease Control Area

Update: 2021-06-11 09:01 GMT

நோய்கட்டுப்பாட்டு பகுதியில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த போது.

திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் அமைந்துள்ளன. நான்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதியில் 25க்கும் மேற்பட்ட இடங்கள் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுப்படுத்து உள்ளனர். திருப்பூர் மாநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில்,இந்த பகுதிகளை மாநகராட்சி கொரோனா சிறப்பு கண்காணிப்பு அதிகாரி கணேசன் ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலத்துக்குட்பட்ட விவேகானந்தா நகர் கட்டுப்பாட்டு பகுதியையும், கொங்கணகிரி கொரோனா சிகிச்சை மையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்து, நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவரத்தை கேட்டறிந்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் போலீஸார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News