திருப்பூர்: மோசமான சாலை அவதிப்படும் மக்கள்

திருப்பூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மோசமான ரோடு அவதிப்படும் மக்கள்.

Update: 2021-05-23 13:19 GMT

திருப்பூர் மாநகராட்சியில் கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என நான்கு மண்டலங்கள் அமைந்து உள்ளன. இதில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாண்டியன் நகர் காசி விநாயகர் கோவில் 2 வது வீதி பகுதியில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தார் ரோடு வசதி இல்லாமல், மண் ரோடாக உள்ளது. மேலும், சாக்கடை வசதி இல்லாததால், இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், வாகனத்தில் செல்வோர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழைக்காலத்தில் ரோடு சேறும், சகதியுமாகி விடுவதால், பொது மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். ரோட்டை தார் ரோடாக மாற்றி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News