திருப்பூரில் ஏற்றுமதிநிறுவனங்கள், கடைகள் திறக்க அனுமதி டாஸ்மாக் திறப்பு ,போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக் கடை திறக்கவும், போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-25 14:28 GMT

சென்னை அரசு தலைமைச் செயலகம்.


திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடை திறக்கவும், போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வகை 1 ல் உள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசின் அத்தியாவசிய துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதர அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்கு இடுபொருட்கள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படலாம். தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். அழகு நிலையங்கள், சலூன் கடைகள் குளிர்சாதன வசதியின்றி ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைதிறப்புக்கு அனுமதியளித்தும், போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Tags:    

Similar News