திருப்பூர் மாநகராட்சியில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் 'கட்'

குழாய் பராமரிப்பு பணி காரணமாக, திருப்பூர் நகரின் சில பகுதிகளில், இன்றும் நாளையும் குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2022-03-17 07:00 GMT

இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீர்த் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2-வது குடிநீர்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் 17, 18 ஆகிய 2 நாட்கள் மின்சார வாரியத்தின் மூலம் மின் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே, மாநகராட்சி 1வது மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண் 11, 13, 14, 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 44,45,50,51 மற்றும் 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 52, 55 ஆகிய பகுதிகளில் இன்றும் (17ம் தேதி), நாளையும் (18ம் தேதி) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News