திருப்பூரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக, திருப்பூர் நகரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

Update: 2021-11-05 05:45 GMT

இது தொடர்பாக, திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வீரபாண்டி துணை மின் நிலையத்தில் வரும்6 - ந்தேதி ( சனிக் கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அன்றைய தினம்  காலை 9 மணி முதல்,  மாலை 5 மணி  வரை,  வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம் , ( வாய்க்கால்மேடு ) குளத்துப்பாளையம் , கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, முல்லைநகர், டி. கே. டி. மில் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. 

அதேபோல், ஆண்டிப்பாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்துநகர் , சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்குப்பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே. என். எஸ். நகர் , இடும்பன்நகர், ஆர். கே. காட்டன் ரோடு, காமாட்சிநகர், செல்லம் நகர், மகாலட்சுமி நகர், அம்மன்நகர், தாந்தோணியம்மன் நகர் , எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமிநகர், லிட்டில்பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News