பிரபல நடிகருடன் செல்பி எடுத்த இளைஞர்கள்- போலீஸ் தடியடி

Update: 2021-04-14 07:30 GMT

திருநெல்வேலியில் கொரோனா பயத்தையும் மீறி சின்னத்திரை காமெடி நடிகருடன்,இளைஞர்கள் செல்பி எடுக்க முயன்றனர். இதில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் புதிதாக தனியார் செல்போன் நிறுவனத்தின் ஆன்லைன் சேவைக்கான வெப்சைட் துவக்க விழா நடைபெற்றது. இதில் சின்னத்திரை காமெடி நடிகர் புகழ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெப்சைட்டை துவக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டு இன்று காலை அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றது. நடிகர் புகழை காண இளைஞர்கள் ஏராளமானோர் அந்த கடை முன்பாக கூடியிருந்தனர்.

வெப்சைட்டை துவக்கி வைத்து விட்டு அவர் வெளியே வந்து காரில் ஏறிய போது கொரோனா பயத்தையும் மீறி அவருடன் இளைஞர்கள் செல்பி எடுக்க முயன்றனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாஸ்க் அணியாமல் கும்பலாக கூடியிருந்த கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு லேசாக தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News