நெல்லையில் உலக தலைக்காய தினத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

நெல்லையில் உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-03-20 06:09 GMT

நெல்லையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

உலக தலைக்காய விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் மார்ச் 19ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நெல்லையில் உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தையொட்டி மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நெல்லை கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் தொடங்கி ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை வரை பேரணி நடைபெற்றது.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் பாலமுருகன் பேரணியை தொடங்கி வைத்தார். போக்குவரத்து காவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்குப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த பேரணியில் ஆம்புலன்ஸ் வாகனமும் கலந்து கொண்டது.

Tags:    

Similar News