நெல்லை:மின்வாரியம் தனியார் மயமாக்களை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு மின்சார வாரியம் தனியார் மயமாக்களை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-19 16:47 GMT

மின்வாரியம் தனியார்மயமாக்கலை கண்டித்து நெல்லையில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா 2021 ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார வாரியங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பெருமாள்சாமி தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது அவர்கள் மின் வாரியத்தை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர்,  கூட்டமைப்பு தலைவர் பெருமாள்சாமி பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்: 2014ஆம் ஆண்டிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மின்சார சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சாதாரண மக்களுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான இணை மானியம் கிடைக்காது என்று கூறினார்.

Tags:    

Similar News