பிரம்மா குமாரிகள் சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் பிரம்மா குமாரிகளின் அமைதி ஊர்வலம்.

Update: 2022-05-29 11:00 GMT

நெல்லையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில்  நடைபெற்ற புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு அமைதி பேரணி.

நெல்லையில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு அமைதி பேரணி நடைபெற்றது.

புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று திருநெல்வேலி பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் பிரம்மா குமாரிகளின் அமைதி ஊர்வலம் பாளையங்கோட்டை காவல் நிலையம் முன்பு தொடங்கி வைக்கப்பட்டது. இதில் மது,புகை பழக்கத்தினால் விளையும் தீமைகள் எவை, ராஜயோக தியானத்தின் மூலம் தீய பழக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது எப்படி? என்பது பற்றி பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் கெடன் சிவபாலன் விளக்கம் அளித்தார்.

திருநெல்வேலி பிரம்மா குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் புவனேஸ்வரி, திருநெல்வேலி மாநகரகாவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார், திருநெல்வேலி சர்வசமய கூட்டமைப்பின் தலைவர் சிதம்பரம், செயலாளர் முனைவர்.கோ. கணபதி சுப்பிரமணியன், துணைச் செயலாளர் கவிஞர்.சு.முத்துசாமி அனைவரும் சேர்ந்து புகையிலை ஒழிப்பு கண்காட்சி வாகனத்தையும் அமைதி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

இந்த புகையிலை ஒழிப்பு படவிளக்க கண்காட்சி வாகனம் இன்று நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளிலும், நாளை திங்கள்கிழமை அம்பாசமுத்திரம் சுற்றியுள்ள பகுதிகளிலும், மே 31 செவ்வாய்க்கிழமை தென்காசி சுற்றியுள்ள பகுதிகளிலும் பொது மக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த பிரம்மா குமாரிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளது. அப்போது புகையிலை தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

Tags:    

Similar News