இலங்கை தமிழர்களுக்காக முதலமைச்சர் அறிவித்த திட்டத்தை வரவேற்கிறேன் சீமான்

இலங்கை தமிழர்களுக்காக முதலமைச்சர் அறிவித்த திட்டம் கால தாமதமானது என்றாலும் அதனை வரவேற்கிறேன் என்று நெல்லையில் சீமான் தெரிவித்தார்.

Update: 2021-08-27 13:59 GMT

நெல்லையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை மாவட்டம் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

 ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாகவும், தேர்தலில் போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்பதாக கூறினார். இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை அரசு மூட வேண்டும். Q பிரிவு காவல்துறையை கலைக்க வேண்டும்,

சிறப்பு முகாம்களை அமைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் எனவும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் இலங்கை தமிழர்களுக்கு அறிவித்த திட்டங்கள் கால தாமதமானது. இருப்பினும் அதனை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

காங்கிரஸ் பாஜக தலைமையில் அமைந்த அரசுகள் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மறுக்கிறது.

திபெத் மக்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறார்கள். இலங்கை தமிழர்களை சட்டத்திற்கு புறம்பாக குடியேறினார்கள் என சொல்கிறார்கள்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். அதிகாரித்தில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுத்து இரட்டை குடியுரிமையை பெற்று அவர்களுக்கு வழங்கவேண்டும்.

பெண்களுக்கு இலவச பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது. 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் என சொல்லும் அரசு எப்படி கடனானது என தெரிவிக்க வேண்டும்.

கட்டணம் குறைப்பு செய்யலாம் இலவசம் தேவையில்லை என தெரிவித்தார். பள்ளிகள் திறப்பு மூலம் மக்களை சராசரி வாழ்கைக்கு கொண்டுவர அரசு முயற்சிக்கிறது.ஊரடங்கை மக்கள் விரும்பவில்லை.நோயை விட முடக்கம் என்பது மக்களை மிகவும் பாதிக்கிறது. .நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆதரித்தது திமுக.நீட்டுக்காக மக்கள் போராட்டம், கிளர்ச்சி ஏற்பட்டதற்காக திமுக எதிர்க்க தொடங்கியது என தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது நாங்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக நாங்கள் எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை.

திராவிட கட்சிகளின் ஆட்சி மக்களை ஏமாற்ற மட்டுமே. அரசியல் தலைவர்களின் படங்கள் கல்வி புத்தகங்களிலும், பைகளிலும் இடம்பெறுவது தேவையற்றது.

முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருப்பதை எடுக்க வேண்டாம் என முதல்வர் கூறியிருப்பது அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News