மேலப்பாளையத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

மேலப்பாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-25 09:02 GMT

மேலப்பாளையம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (26.03.2022) சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது மின் வாரியம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின்ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகர்புரம, பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத்ரோடு, பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு, (என்.ஜி.ஓ. காலனி), பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News