நெல்லை-அருங்காட்சியகத்தில் சரிகமபதநி எழுத்துக்கள் மூலம் இணையவழி கோல பயிற்சி.

நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் சரிகமபதநி எழுத்துக்கள் மூலம் கோலம் உருவாக்கும் இணைய வழி பயிற்சி.நடைபெற்றது

Update: 2021-06-03 14:08 GMT

நெல்லை-அரசு அருங்காட்சியகத்தில் சரிகமபதநி எழுத்துக்கள் மூலம் கோலம் உருவாக்கும் இணைய வழி பயிற்சி.நடைபெற்றது

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கோலப் பயிற்சி இன்று நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்டக் காப்பாட்சியர் சத்தியவள்ளி துவங்கி வைத்தார். இப்பயிற்சியினை மதுரை மாவட்ட கோல மாஸ்டர் தியாகராஜன் மற்றும் அவரது மகள் உமா கலை ஆசிரியர் ஆகியோர் இணைந்து நடத்தினர்.


இந்த இணையவழி பயிற்சியில் சரிகமபதநி எழுத்துக்களை கொண்டு புள்ளி கோலம் உருவாக்கும் பயிற்சி மற்றும் சரிகமபத என்கிற எழுத்துக்களை கொண்டு பல்வேறு ஓவியங்கள் தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவ்ட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் மகளிர் மிகவும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டதாக அருங்காட்சியக காப்பாளர் சத்திய வள்ளி தெரிவித்தார்.

Tags:    

Similar News