நெல்லையில் கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-09-12 11:03 GMT

நெல்லை கொரோனா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிவஞானம், மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வநாயகம், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ( ஒழுங்கு நடவடிக்கைகள் ) சுகன்யா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News