சைக்கிளில் போய் கலெக்டரை சந்தித்த அர்ஜுன் சம்பத்: இதற்காகத்தானா?

நெல்லையில், சைக்கிளில் சென்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், கலெக்டரிடம் மனு அளித்தார். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, அவர் சைக்கிள் ஓட்டிச் சென்றார்.

Update: 2021-11-19 08:30 GMT

பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சைக்கிள் ஓட்டி வந்த அர்ஜுன் சம்பத். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் வகையில், அத்கன் மீதான மாநில அரசின் வரிகளை, மத்திய அரசு  குறைத்துள்ளது. எனினும் தமிழகத்தில் வரி குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை என்று , இந்து மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், நெல்லை கொக்கிரகுளம் மாவட்ட அறிவியல் மையம் பகுதியில் இருந்து, சைக்கிள் பயணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து,  அக்கட்சியினர் கோரிக்கை மனுவை, ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.

பின்னர், அர்ஜுன் சம்பத் கூறியதாவது:  தீபாவளி பரிசாக     அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. அதனை பின்பற்றி பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் விலையை குறைத்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் கூட பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க முன்வந்துள்ளன.

ஆனால், தமிழக அரசு இதுகுறித்து தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது, விவசாயிகள் நிவாரணம் ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிய ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு ஏக்கருக்கு 8000 வழங்குகிறார். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகைக்காக 20 பொருள்கள் வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் வழங்கியது. போல் 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கிறோம்.

தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் இது அமையும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. கண் துடைப்புக்காக,  குறைந்த தொகை பெட்ரோல் விலையில் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பில் தமிழக அரசு ஈடுபடவில்லை. மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை கைவிட்டு பெட்ரோல், டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News